ஆண்களாய் இருப்பது ...................
அடக்கவேண்டிய அவசியமேதும் இருப்பதில்லை ,
தோன்றும் கணத்தில் கழிக்கலாம் தெரு ஓரங்களில் கூட,
கூட்ட நெரிசலில் வேர்த்து போனால்
கவலை இல்லை சட்டபொத்தான்களை கழற்றினால் போதும்
காற்று வாங்க ,
அடை மழையில் நனைய நேரிட்டால்,
ஒதுங்கும் கடைகளில் குளிருக்கு இதமாய் தேநீர் பருகலாம்,
ஒப்புதல் எதுவும் தேவையில்லை
நண்பனின் அறைக்கு நடுநிசியில் போக,
தலைவலியோடு வீடு திரும்புகையில் சூடான காபி கிடைக்கும்
வலியின் வீரியம் குறைக்க ,
அவசரங்களில் அடுக்கிய சட்டைகளை கலைத்தால்
பரவாயில்லை
திரும்ப அடுக்க அவசியமேதுமில்லை
மேல்சட்டை அணியாமல் இருந்தால் போதும்
முற்றும் துறந்தவனென தெரிவிக்க,
வாந்தி, மயக்கம், வலிகள்
எதுமின்றி பிள்ளைகள் பெயரின் முதல் எழுதாகலாம்
ஆமாம்!
ஆண்களை இருப்பது தான் எத்தனை சௌகர்யம் !

Comments
Post a Comment