புத்தாண்டு பிறந்ததாய் ஆர்பரிக்கிறார்கள் இவர்கள் யாவரும் ! நீ விட்டு சென்ற புள்ளியில் நின்று கொண்டிருக்கும் எனக்கு , நீ வந்த பிறகே பிறக்கும் புது ஆண்டு !
காற்றின் ஆட்டுவித்தலுக்கு இறைந்து கொண்டே இருக்கும் மரத்தை போல , ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் என்னை, காதல் நிறைந்த பார்வை ஒன்றால் , வாயடைக்க செய்து , மேலே கொஞ்சம் வெட்கத்தையும் படர செய்கிறாயே, அது எப்படி?
நீ காதல் கடிதம் ஒன்று தருவாயா ? என்று நீண்ட நாளாய் காத்துக்கிடக்கிறேன் ...... அதில் காதல் இல்லையென்பிலும் பரவாயில்லை , என் பெயர் தாங்கிய ஒற்றை சொல் கூடவா இல்லாமல் இருக்கும்!
மை கொஞ்சமும் காதல் நிறையவும் கசியும் என் கண்களை பார்! அதை காட்டிலும் காதல் அட்டைகள் ஒன்றும் அதனை நுட்பமாய் என் காதல் சொல்லி விடபோவதில்லை ! காதலர் தின வாழ்த்துக்கள் !
ஒற்றை எழுத்தால் குரலெடுத்து ஆ என்றாய் ஊ என்றாய், சுற்றம் இருப்பவரோ அதை, வெறும் சத்தம் என்றே எண்ணியிருக்க , எழுத்தொன்றும் சொல்லாகும் அற்புதம் அது உன் மழலை மொழி என்றறிவேன் நான் மட்டும் ! " யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்றான் பாரதி . மகளே உன் மொழி அறியாமல் போனதனால் !