Skip to main content

Posts

Showing posts from February, 2014

விட்டு சென்ற புள்ளியில்.....

புத்தாண்டு பிறந்ததாய் ஆர்பரிக்கிறார்கள் இவர்கள் யாவரும் ! நீ விட்டு சென்ற புள்ளியில் நின்று கொண்டிருக்கும் எனக்கு , நீ வந்த பிறகே பிறக்கும் புது ஆண்டு !

எச்சில் ஈரத்தில்

  சண்டையிடும் இரவுகளின் விடியலை, முத்தங்களால் துவங்கி வை! கோபத்தின் அனல் கொண்டு,பேசிய வார்த்தைகள் யாவும்  கரைந்து விடாதா  அந்த எச்சில் ஈரத்தில் !

கடந்து

  'காதல்' என்ற சொல்லை உச்சரிக்கும்   எல்லா பொழுதுகளிலும், உன் முகம் கடந்து போவதை  தவிர்க்கவே முடிவதில்லை!

பார்வை ஒன்றால்

காற்றின் ஆட்டுவித்தலுக்கு இறைந்து  கொண்டே இருக்கும் மரத்தை போல , ஓயாமல்  பேசிக்கொண்டே இருக்கும் என்னை, காதல் நிறைந்த பார்வை ஒன்றால் , வாயடைக்க செய்து , மேலே கொஞ்சம் வெட்கத்தையும் படர செய்கிறாயே, அது எப்படி?

எழுதி எழுதி

எழுதி எழுதி எழுதி உன் நினைவுகள் தீர்க்க  முயல்கிறேன்! ஆனால், பார்வை ஒன்றை வீசி, முடிதலுக்கு முடியாமை செய்கிறாய் !

காத்துக்கிடக்கிறேன் ......

நீ காதல் கடிதம் ஒன்று தருவாயா ?   என்று நீண்ட நாளாய் காத்துக்கிடக்கிறேன் ...... அதில் காதல் இல்லையென்பிலும் பரவாயில்லை , என் பெயர் தாங்கிய ஒற்றை சொல் கூடவா இல்லாமல்  இருக்கும்!

நுட்பமாய்

மை கொஞ்சமும் காதல் நிறையவும் கசியும் என் கண்களை பார்! அதை காட்டிலும் காதல் அட்டைகள் ஒன்றும் அதனை நுட்பமாய் என் காதல் சொல்லி விடபோவதில்லை ! காதலர் தின வாழ்த்துக்கள் !

மழலை மொழி

ஒற்றை எழுத்தால் குரலெடுத்து ஆ  என்றாய் ஊ என்றாய், சுற்றம் இருப்பவரோ அதை, வெறும்  சத்தம்   என்றே எண்ணியிருக்க , எழுத்தொன்றும் சொல்லாகும் அற்புதம் அது உன் மழலை மொழி என்றறிவேன் நான் மட்டும் ! " யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்றான் பாரதி . மகளே உன் மொழி அறியாமல் போனதனால் !