இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அப்பா...... உங்களை முழுதாய் அறிய,
உங்கள் வாழ்வியல் முறையை பின்பற்ற, உங்களின் சிந்தனை முழுமையும் தெரிய
முயன்று கொண்டே இருக்கிறோம்..
எல்லோர் வாழ்விலும் பின்தொடர ஒரு செய்தி உண்டு.
ஆனால் உங்களை அறிய, பின்தொடர ஆயிரம் உண்டு அப்பா...
எத்தனை பலம் மிகுந்தவர் நீங்கள் என எண்ணி வியக்கிறோம் ஒவ்வொரு நொடியும் ..
கொண்ட கொள்கையில்
உங்கள் பாதையின் தேர்வு,
மூலமும் முற்றுமாய் அதை படித்த தெளிவு, விரும்பிய அந்த பாதையில் தொய்வின் வேகம் குறையாமல் இந்நாள் வரை நீங்கள் நடந்து கடப்பது,
மிச்ச உள்ள வாழ்வின் கேள்விகளுக்கும் இப்போதே பதில் தேடி வைத்திருப்பது..
எங்களால் கால் பங்கும் நடைமுறை படுத்த முடியா இவற்றை 200 சதம் பிசகின்றி செய்கிறீர்கள் நீங்கள்...
இதை அத்தனையையும் தாண்டி எங்கள் வாழ்வின் கொடையாய் எம் பிள்ளைகளுக்கு கிடைத்த
அருமையான
கதை சொல்லி நீங்கள்.. அவர்கள் வாழ்வின் கற்பனை திறனின் 50 % நீங்கள் கொடுத்தது 40% உங்களை அறியாமல் அவர்கள் உங்களிடமிருந்து எடுத்து கொண்டது...
இந்த பரிசும், திருட்டும் அவர்கள் வாழ்வின் ஆக சிறந்த செல்வம்...
உங்கள் மரபை சுமந்ததினால் நாங்கள் பெற்றோம் சிறு பகுத்தறிவு..
மிச்சமும் பெற உங்களை நிறையவும், புத்தகங்களை கொஞ்சமும் படித்து கொண்டிருக்கிறோம்...
அம்மா எங்கள் நலம் காக்க...
நீங்கள் எம் சிந்தனையை சீர் திருத்த..
அப்பா மீண்டும் சொல்கிறேன் நீங்களும் அம்மாவும் எம் வாழ்வின் கொடை..
எம் பிள்ளைகள் நீண்ட காலம் இக்கொடையை பெற நாங்கள் உங்களை வாழ்த்தி விரும்புகிறோம் .
ஆரோக்கியமாய் நகரட்டும் உங்களின் நாட்கள்...
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அப்பா...... இப்படிக்கு
உங்களின் அன்பு மகள்....


Comments
Post a Comment