Skip to main content

 இனிய பிறந்தநாள்

வாழ்த்துக்கள்
அப்பா......

உங்களை முழுதாய் அறிய,
உங்கள் வாழ்வியல் முறையை பின்பற்ற, உங்களின் சிந்தனை முழுமையும் தெரிய
முயன்று கொண்டே இருக்கிறோம்..
எல்லோர் வாழ்விலும் பின்தொடர ஒரு செய்தி உண்டு.
ஆனால் உங்களை அறிய, பின்தொடர ஆயிரம் உண்டு அப்பா...
எத்தனை பலம் மிகுந்தவர் நீங்கள் என எண்ணி வியக்கிறோம் ஒவ்வொரு நொடியும் ..
கொண்ட கொள்கையில்
உங்கள் பாதையின் தேர்வு,
மூலமும் முற்றுமாய் அதை படித்த தெளிவு, விரும்பிய அந்த பாதையில் தொய்வின் வேகம் குறையாமல் இந்நாள் வரை நீங்கள் நடந்து கடப்பது,
மிச்ச உள்ள வாழ்வின் கேள்விகளுக்கும் இப்போதே பதில் தேடி வைத்திருப்பது..
எங்களால் கால் பங்கும் நடைமுறை படுத்த முடியா இவற்றை 200 சதம் பிசகின்றி செய்கிறீர்கள் நீங்கள்...
இதை அத்தனையையும் தாண்டி எங்கள் வாழ்வின் கொடையாய் எம் பிள்ளைகளுக்கு கிடைத்த
அருமையான
கதை சொல்லி நீங்கள்..
அவர்கள் வாழ்வின் கற்பனை திறனின் 50 % நீங்கள் கொடுத்தது 40% உங்களை அறியாமல் அவர்கள் உங்களிடமிருந்து எடுத்து கொண்டது...
இந்த பரிசும், திருட்டும் அவர்கள் வாழ்வின் ஆக சிறந்த செல்வம்...
உங்கள் மரபை சுமந்ததினால் நாங்கள் பெற்றோம் சிறு பகுத்தறிவு..
மிச்சமும் பெற உங்களை நிறையவும், புத்தகங்களை கொஞ்சமும் படித்து கொண்டிருக்கிறோம்...
அம்மா எங்கள் நலம் காக்க...
நீங்கள் எம் சிந்தனையை சீர் திருத்த..
அப்பா மீண்டும் சொல்கிறேன் நீங்களும் அம்மாவும் எம் வாழ்வின் கொடை..
எம் பிள்ளைகள் நீண்ட காலம் இக்கொடையை பெற நாங்கள் உங்களை வாழ்த்தி விரும்புகிறோம் .
ஆரோக்கியமாய் நகரட்டும் உங்களின் நாட்கள்...
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அப்பா......
இப்படிக்கு
உங்களின் அன்பு மகள்....
Naveen Kumar, Sasi Rekha Praveen and 204 others
58 Comments
6 Shares
Like
Comment
Share

58

Comments

Popular posts from this blog

பாலியல் பிரச்சனைகள்

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளில் பாலியல் கொடுமைலளுக்கு தான் முதலிடம் தரலாம். அதிலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வக்கிரங்களை division sub division கொண்டும் பிரிக்கலாம் போல .வருடத்திற்கு அல்ல நாள் ஒன்றிற்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் (அதும் வெளியில் தெரியும்) புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ந்துபோவோம் நாம் அனைவரும். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டுமே! அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும். கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழ...
பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!! முழுவதுமாய் உலராமல் ஈரம் படிந்த கூந்தலுடன் பணிக்கு ஆயத்தமாவாள், அமர்ந்திருக்கும் அழகு பெண்ணின் முடி உலர்த்த, அது முடிந்து புருவம் திருத்துகிறாள் மாறி மாறி ,ஆடி கொடுத்து ஒப்புதல் பெற சரியென்பவர் எவருமிருப்பதில்லை, திருத்தம் சொல்ல மீண்டும் திருத்துவாள், அதன் பிறகு அறையடி கூந்தலை காலும் அறையுமாக்குவாள் கூந்தலை முடியா சபதமேற்ற பெண்களுக்கு, இடை இடையே அவள் நிறுவன தயாரிப்புகளுக்கு இவளே விளம்பர நிர்வாகியாகி விற்பனைக்கு மெனக்கெடுவாள் ப்ளீச் என்போரிடம் கூடவே பேசியலுக்கும், வேக்ஸ்ங் செய்வோரிடம் பெடி-க்யூர்-க்கும் சிபாரிசு செய்து வந்திருக்கும் பெண்ணின் அழகுக்கும், அவள் முதலாளியின் லாப கணக்கிற்கும் பாடுபடுவாள், இரவின் முகப்பில் இறுக்கி பிடித்த ஜீன்ஸ் பேண்ட களைந்து சுடிதார் துப்பட்டாவிற்கு மாறி இப்போது காய்ந்திருக்கும் தலையை பின்னி முடித்து அலங்காரம் கலைத்து வீடு திரும்புவாள் அழகு நிலைய பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!!  

சொல்லதீங்க! Please!

ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது. மற்றொருவர் பிரச்சார  மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler  நிற்கிறது. பிரச்சார சமயங்களில் கூட வெயிலையும் சந்திக்காது, அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு  என்பது என்னவென்றே தெரியாது. மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள். அதனால தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும், Letter-ல  இப்படிக்கு சேக்குரமாதிரி, மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு சொல்லதீங்க!  Please!