Skip to main content

Posts

Showing posts from April, 2014

சொல்லதீங்க! Please!

ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது. மற்றொருவர் பிரச்சார  மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler  நிற்கிறது. பிரச்சார சமயங்களில் கூட வெயிலையும் சந்திக்காது, அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு  என்பது என்னவென்றே தெரியாது. மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள். அதனால தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும், Letter-ல  இப்படிக்கு சேக்குரமாதிரி, மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு சொல்லதீங்க!  Please!

காதலோடு

உங்கள் காதல் கதையை எதற்கு எங்களிடம் என்றால் , வாழ்வின் சந்தோஷங்களை, வலிகளை, துயரங்களை, முடிவுகளை, , நண்பர்களிடம் தானே சொல்லுவோம். இல்லையா? அது தான், வாழ்வின் வெற்றி, சந்தோஷம் ஏதோ இது !   காதலின் மூலம் தெரியாது, ஆழம் தெரியும் காதலித்தவர்கும், காதலிக்காதவர்கும்.         "காதல்"  இந்த ஒன்றை கொண்டே 100000 ஹய்கூ  பிறக்கலாம் 10000 கவிதைகள் எழுதலாம், 1000 சிறுகதைகள் உருபெறலாம் 100 நாவல்களுக்கான கரு உண்டு குறும்படங்கள், திரைப்படங்கள் இன்னும் பல நூற்றாண்டு இதை தவிர்த்து சொல்ல இயலாத காரியம். அந்த காதல் என்னை மட்டும் விடுமா என்ன?    "நாங்கள்" மற்றவரை போல அல்ல, என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். காதலெனும் வரம் பெற்ற அத்தனை  பேரை போல தான் நாங்களும். "பேறு" பெற்றவர்கள்.   இருவரும் அவரவர் கொள்கைகளை ஏற்க நிர்பந்தித்திருக்கிறோம்.ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவரவர் கொள்கைகளிலேயே பிடிவாதமாய் நின்றிருக்கிறோம். கோபம் வருவதுண்டு அவ்வபோது, ஆனால் மறுகணமே எங்களின் காதல் அது அத்தனையும் புறந்தள்ளி எம் நெருக்கத்தின்...

தமிழ் புத்தாண்டு கவிதை போட்டி

"சித்திரை " சாலிவாகனனோ. கணிஷ்கரோ சொல்லி சென்றதாய் சரித்திரம் சொல்கிறது . மே-ஷம் சூரியனில் புகுவதாய் ஜோதிடம் சொல்கிறது , மூலம் எதுவென்பினும், நிறைவு தரும் தை புலர, ஆரம்பம்  தரும் சித்திரை சூரியனுக்கு மட்டுமல்ல, சுற்றத்தார் அனைவருக்குமே சுகந்தமே