அம்மா "காதலர் தின வாழ்த்துக்கள்"
எத்தனை அருகில் இருந்தாலும் காதலை எல்லா நேரங்களிலும்
உணர முடிவதில்லை.
நானும் அம்மாவும் வசிப்பது கூப்பிடும் தூரத்தில்தால் என்ற போதும், பிள்ளைகளும், வீடும், பணியும் மான ஓட்டத்தில் அம்மாவை சந்தித்தே 10 நாட்களுக்கு மேல் ஆகிறது .
நாளுக்கு 10 முறையாவது போன் செய்யும் அவரிடம் கேள்விகளுக்கு மட்டும் விடை சொல்லி துண்டிப்பேன்.
இன்று என்னவர் ஊரில் இல்லை என்பதனால் மதியம் வருவதாய் சொல்லியிருந்தேன் அம்மாவிடம்.
நான் இல்லம் நுழைந்த அடுத்த நொடி தட்டில் உணவு பரிமாற தொடங்கிவிட்ட அம்மா, நான் கை கழுவவும் அவகாசம் கொடுத்திருக்கவில்லை .
வற்றகுழம்பு , கீரைகூட்டு, அப்பளம், ரசம் அத்தனையும் அறுவை சிகிச்சை முடிந்து ஒரு மாதமும் ஆகிடாத வலது கையை கொண்டே செய்திருக்கிறார்.
நீண்ட நாளைக்கு பிறகு மிக திருப்தியாய் சாப்பிட உணர்வு.
திட்டி கொண்டே, திருத்தி கொண்டே, உபதேசித்து கொண்டே அன்பு செய்யும் அம்மாக்களின் காதல் புரிவதே இல்லை நமக்கு பெரும்பாலான சமயங்களில்,
அழகான `காதலை அம்மாவை தவிரவும் வேறு யாரும் தந்திட முடியாது.
அம்மாக்களின் இந்த அக்கறை கலந்த காதலில் பல நேரங்களில் அப்பாக்களையும் புறம் தள்ளி விடுகிறார்கள்.
வார்த்தைகளில் சொல்ல இயலா பேரன்பை தரும் அம்மா உன்னிடம்
இத்தன்னை நாளாய் சொன்னதில்லை
இன்று சொல்கிறேன் காதலுடன் அம்மா "காதலர் தின வாழ்த்துக்கள்"

Comments
Post a Comment