Skip to main content

 அம்மா என்ற ஒற்றை சொல்லில் அடங்கி விடுகிறது எதிலுமே ஒப்பிட முடியா பேரன்பு...

அன்றாட அவசரத்திலும் என் நலம் கேட்டு அறிவது நீ மட்டுமே அம்மா.....
20 ல் ஒன்று என்பதே விகிதம் உன் தொலைபேசி அழைப்பிற்க்கு என் அழைப்பு..
அம்மா...
இன்று நான் இரு பிள்ளைகளின் தாயாய் ஆன பின் உணர்கிறேன் நீ எங்களை வளர்க்க கடந்த பாதைகளின் வலி ....
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அம்மா..

அம்மா... சண்டையிடுவேன் உன்னிடம் எப்போதும் ...
என் வசைகளை வீசி எரிந்து, அடுத்த நொடியே ஏதும் நிகழாததை போல அன்பை கொட்டி தருவாய்.....
அதை அறிந்தே என்னவோ என் நாக்கு தடை கோருவதில்லை உன்னிடம். .
என் குரல் கேட்டு என் நலம் அறிவது நீ மட்டுமே அம்மா...
இந்த வாழ்வியல் முறையில் உள்ள சிக்கல் இதுவே..
நம் அருகில் உள்ளவரிடம் நாம் சொல்வதே இல்லை அவர்கள் நம் வாழ்வில் எத்தனை அவசியம் என்பதை..
அம்மா ..
இதை நான் உன்னிடம் சொன்னதே இல்லை..
இன்றை விடில் இதை சொல்ல உகந்த நாளில்லை...
அம்மா...
இன்று நான் சுமந்து திரியும்
குணம், திறமை, படிப்பு வாழ்வியல் முறை எல்லாமே நீ கொடுத்த கொடை...
பதில் தேடி செய்வதில்லை அம்மாக்கள்..
ஆனால் உன் பணி செய்வதில் சொல்லாமல் சொல்கிறோம் நீ அறம் சொல்லி வளர்த்த பிள்ளைகள் நாங்களென்று...
அம்மா...
எங்கள் நலம் அறிய நீ வேண்டும்..
உன் நலன் வேண்டி வாழ்த்துகிறோம் அம்மா..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அம்மா..

Comments

Popular posts from this blog

பாலியல் பிரச்சனைகள்

உலகெங்கும் நடக்கும் பெண்களுக்கு எதிரான அநீதிகளில் பாலியல் கொடுமைலளுக்கு தான் முதலிடம் தரலாம். அதிலும் இந்தியாவில் நடக்கும் பாலியல் வக்கிரங்களை division sub division கொண்டும் பிரிக்கலாம் போல .வருடத்திற்கு அல்ல நாள் ஒன்றிற்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் (அதும் வெளியில் தெரியும்) புள்ளி விவரங்களை கேட்டால் அதிர்ந்துபோவோம் நாம் அனைவரும். ஆனால் அந்த ஒரு நிமிடம் மட்டுமே! அடுத்த வீட்டுக்கு நடக்கும் அநீதிகளுக்கு "அச்சசசோ" என்று பரிதாபம் காட்டிவிட்டு நமக்கு நடக்காதவரை நல்லது என்று கடந்து போய்கொண்ட இருக்கிறோம் அனைவரும். கடல் போன்ற பிரச்சனையின் துளி தெரியும் நமக்கு, முழுவதும் தெரியாமல் போவது இன்னும் பெரிய அவலம். நாள்தோறும் கற்பழிப்பு பற்றிய செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது தொலை காட்சியிலும். செய்தி தாள்களிலும். அறிந்து கொண்டே தான் இருக்கிறோம், அதை தாண்டி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறோம். புள்ளிவிவரங்களால் பெருகி வரும் இந்த பிரச்சனையின் மூலமும், வரும் காலமும் குறித்த புரிதல் இல்லாமல் இருப்பது பெரும் துயரம். இந்த பிரச்னை குறித்து விவாதிக்க துவங்கும் பொழ...
பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!! முழுவதுமாய் உலராமல் ஈரம் படிந்த கூந்தலுடன் பணிக்கு ஆயத்தமாவாள், அமர்ந்திருக்கும் அழகு பெண்ணின் முடி உலர்த்த, அது முடிந்து புருவம் திருத்துகிறாள் மாறி மாறி ,ஆடி கொடுத்து ஒப்புதல் பெற சரியென்பவர் எவருமிருப்பதில்லை, திருத்தம் சொல்ல மீண்டும் திருத்துவாள், அதன் பிறகு அறையடி கூந்தலை காலும் அறையுமாக்குவாள் கூந்தலை முடியா சபதமேற்ற பெண்களுக்கு, இடை இடையே அவள் நிறுவன தயாரிப்புகளுக்கு இவளே விளம்பர நிர்வாகியாகி விற்பனைக்கு மெனக்கெடுவாள் ப்ளீச் என்போரிடம் கூடவே பேசியலுக்கும், வேக்ஸ்ங் செய்வோரிடம் பெடி-க்யூர்-க்கும் சிபாரிசு செய்து வந்திருக்கும் பெண்ணின் அழகுக்கும், அவள் முதலாளியின் லாப கணக்கிற்கும் பாடுபடுவாள், இரவின் முகப்பில் இறுக்கி பிடித்த ஜீன்ஸ் பேண்ட களைந்து சுடிதார் துப்பட்டாவிற்கு மாறி இப்போது காய்ந்திருக்கும் தலையை பின்னி முடித்து அலங்காரம் கலைத்து வீடு திரும்புவாள் அழகு நிலைய பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!!  

சொல்லதீங்க! Please!

ஒருவர் ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார், இன்னொருவர் வரும் முன்பு வெப்பத்தை தணிக்க ஒரு லாரி தண்ணீர் தெளிக்க படுகிறது. மற்றொருவர் பிரச்சார  மேடையில் ஒன்றிற்கு நான்காய் air cooler  நிற்கிறது. பிரச்சார சமயங்களில் கூட வெயிலையும் சந்திக்காது, அவர்களது சுகபோகங்களையும் இழக்காத இவர்களுக்கெல்லாம் மின் வெட்டு  என்பது என்னவென்றே தெரியாது. மின்வெட்டை ஒழிப்போம் என்றும் சொல்லும் எல்லா அரசியல் தலைவர்களும் மின் வெட்டு என்பதை முழுவதும் அல்ல கொஞ்சமும் அறியாதவர்கள். அதனால தயவது செய்து உங்களது எல்லா தேர்தல் பிரச்சாரங்களிலும், Letter-ல  இப்படிக்கு சேக்குரமாதிரி, மின் வெட்டை ஒழிப்போம், கச்ச தேவை மீட்போம்-னு சொல்லதீங்க!  Please!