அம்மா என்ற ஒற்றை சொல்லில் அடங்கி விடுகிறது எதிலுமே ஒப்பிட முடியா பேரன்பு...
அன்றாட அவசரத்திலும் என் நலம் கேட்டு அறிவது நீ மட்டுமே அம்மா.....
20 ல் ஒன்று என்பதே விகிதம் உன் தொலைபேசி அழைப்பிற்க்கு என் அழைப்பு..
அம்மா...
இன்று நான் இரு பிள்ளைகளின் தாயாய் ஆன பின் உணர்கிறேன் நீ எங்களை வளர்க்க கடந்த பாதைகளின் வலி ....
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அம்மா..அம்மா... சண்டையிடுவேன் உன்னிடம் எப்போதும் ...
என் வசைகளை வீசி எரிந்து, அடுத்த நொடியே ஏதும் நிகழாததை போல அன்பை கொட்டி தருவாய்.....
அதை அறிந்தே என்னவோ என் நாக்கு தடை கோருவதில்லை உன்னிடம். .
என் குரல் கேட்டு என் நலம் அறிவது நீ மட்டுமே அம்மா...
இந்த வாழ்வியல் முறையில் உள்ள சிக்கல் இதுவே..
நம் அருகில் உள்ளவரிடம் நாம் சொல்வதே இல்லை அவர்கள் நம் வாழ்வில் எத்தனை அவசியம் என்பதை..
அம்மா ..
இதை நான் உன்னிடம் சொன்னதே இல்லை..
இன்றை விடில் இதை சொல்ல உகந்த நாளில்லை...
அம்மா...
இன்று நான் சுமந்து திரியும்
குணம், திறமை, படிப்பு வாழ்வியல் முறை எல்லாமே நீ கொடுத்த கொடை...
பதில் தேடி செய்வதில்லை அம்மாக்கள்..
ஆனால் உன் பணி செய்வதில் சொல்லாமல் சொல்கிறோம் நீ அறம் சொல்லி வளர்த்த பிள்ளைகள் நாங்களென்று...
அம்மா...
எங்கள் நலம் அறிய நீ வேண்டும்..
உன் நலன் வேண்டி வாழ்த்துகிறோம் அம்மா..
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
அம்மா..
Comments
Post a Comment