வசவு வார்தைகள் அதிகம் அறியாதவன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பாவம் ! ஆதிமொழியின் வசவு வார்தைகள் அதிகம் அறியாதவன் போல நீ,
கோபத்தின் கடைநிலையில் அல்லது முதல் நிலையிலேயோ
இது ஒன்றை கொண்டே வாயடைக்க செய்து பழகி போனாய்,
சொற்கள் அதிகம் அறியா உம்மை பழித்தீர்க்க சொல் ஒன்று
தேடிபார்கையில் எங்கள் உறுப்புகள் குறித்த
வார்தைகள் தான் சிதறி கிடக்கிறது,
பகிர்ந்தளிக்க இது பொருளிள்லை, உயிர் என்று சொல்ல துணிவற்றவன் தலைவனாவான்
அவன் மனைவி வேசியாவாள் சபைதனில்,
ஆக-
இது எனக்கு மட்டும் புதிதல்ல, பொது
இடம், பொருள், ஏவல் மட்டும்
மாறலாம்,
பெண்ணை வீழ்த்தும் பேராயுதம் இதுவென நம்பியே வளர்க்க பட்டீர்
நீங்கள் என்ன செய்வீர் !
விலை பேசியவர்கள் பெயற்றும், பொருளாகி போனவளை
விலை மாதுவென பெயரிட்ட
முன்னோடிகளின் வழி வந்த உன்னை சொல்லி பலன் ஏதும் இல்லை,
வக்கற்ற ஒருவனால்
சிலர் பெயராகவும், சிலர் செயலாகவும்
சாட்சியங்களோடு கை பிடிக்கும் நாங்கள்
அவ்வப்போது பெயராக மட்டும்,
இப்போது
முத்தங்கள் இட்டு மன்னிப்பு
கோருகிறாய்
குண்டு வீசி மாய்த்த பின்
உணவு பொட்டலங்கள் தருவதை போன்று
கட்டுண்ட பின்
மாற்றென்ன மன்னிப்பதை தவிர,
அடுத்து
அடுப்படியில் இருக்கு ஆயிரம் வேலை!



Comments
Post a Comment