உங்கள் காதல் கதையை எதற்கு எங்களிடம் என்றால் ,
வாழ்வின் சந்தோஷங்களை, வலிகளை, துயரங்களை, முடிவுகளை, , நண்பர்களிடம் தானே சொல்லுவோம். இல்லையா?
அது தான்,
வாழ்வின் வெற்றி, சந்தோஷம் ஏதோ இது !
காதலின் மூலம் தெரியாது, ஆழம் தெரியும் காதலித்தவர்கும்,
காதலிக்காதவர்கும்.
"காதல்"
இந்த ஒன்றை கொண்டே
100000 ஹய்கூ பிறக்கலாம்
10000 கவிதைகள் எழுதலாம்,
1000 சிறுகதைகள் உருபெறலாம்
100 நாவல்களுக்கான கரு உண்டு
குறும்படங்கள், திரைப்படங்கள் இன்னும் பல நூற்றாண்டு இதை தவிர்த்து சொல்ல இயலாத காரியம்.
அந்த காதல் என்னை மட்டும் விடுமா என்ன?
"நாங்கள்" மற்றவரை போல அல்ல, என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன்.
பெரும்பாலான சமயங்களில் அவரவர் கொள்கைகளிலேயே பிடிவாதமாய் நின்றிருக்கிறோம். கோபம் வருவதுண்டு அவ்வபோது, ஆனால் மறுகணமே
எங்களின் காதல் அது அத்தனையும் புறந்தள்ளி எம் நெருக்கத்தின்
அடர்த்தியை கூட்டிவிடும்.
கரம் பிடித்தோ, காதலித்தோ, காதலை சொல்லியோ எத்தனை வருடம் என்ற புள்ளி விபரம் வேறு வேறு.
ஆனால் நீ யார் என்பது தெரியும் முன்பே நீ என்னில் ஒரு புள்ளியாய் நின்ற தருணம் இது.
வருங்காலம் என்னை உன்னுடன் எந்த உறவாய் இணைக்க போகிறது என்ற புதிர் தெரியாமலே காரணங்கள் அற்று ஒரே ஒரு நொடி உன் பார்வைகளால் என்னை நிறைத்து போனாய் .
பெண்ணியம் பேசி வாதிடும் பொளுதுகளிளெல்லாம் புன்னகையால் கடந்து 'ஆணவம் ஆணவம்" என்பாய். அது ஆணவம் இல்லை அடிப்படை உரிமை
என்பேன்.
விவாதங்கள் அத்தனைக்கும் காதலாய் முடிவுரை சொல்வாய்.
என்னை "திமிர்" சொன்னாலும் கூட அந்த திமிர் தான் உனக்கு
பிடித்திருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறேன் இதுவரை.
அது ஒன்றே என் "திமிர்" கூட காரணம்.
ஒட்டி செல்லும் நொடிகள் யாவும் குறை கூறி வெருப்பேற்றுகிறாய்,
உச்சாணி கொம்பில் அமர்ந்து உன்னை ஏளனம் தருணங்களில் ரசிக்கிறாயே!
அதன் மர்மம் கொஞ்சம் சொல்ல கூடாதா?
சிரிப்பு, கோபம், அழுகை , அணைப்பு, வெறுப்பு , விவாதம், சண்டை
இவை அத்தனைக்குமே நம் அகராதியில் காதல் என்ற மறு பெயர் உண்டு.
காதலுக்கு மட்டும் பெருங்காதல் என்ற பெயர்.
வினோதம் இல்லையா ? எனக்கு மட்டுமல்ல காதலோடு நகரும்
வாழ்வை பெற்ற அனைவருக்கும் இதே போல் தான்.
ஏற்கனவே நான் உணர்ச்சி களஞ்சியம் எனவே அளவோடு காதல் செய் என்று எத்தனை முறை உன்னிடம் சொல்வது,
அதன் பலனே உலகம், அரசியல், பெண்ணியம், சாதியம் என முற்போக்காய் பேச நிறைய இருந்தும் உன்னை தாண்டி பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை.
பிறவிகள் ஏழென்ற கதை எனக்கும் தெரியும்,
அதை காரணம் சொல்லி காதல் செய்ய அவகாசம் கோராதே!
உலகில் அறியமுடியா புதிர் நாளை என்பதால் இயன்றவரை இப்போதே காதல் செய் !
நானும் இருக்கும் வரை அதையே செய்வேன் உன்னை காட்டிலும் பல நூறு மடங்காய்!
காதலுடன் !
வாழ்வின் சந்தோஷங்களை, வலிகளை, துயரங்களை, முடிவுகளை, , நண்பர்களிடம் தானே சொல்லுவோம். இல்லையா?
அது தான்,
வாழ்வின் வெற்றி, சந்தோஷம் ஏதோ இது !
காதலின் மூலம் தெரியாது, ஆழம் தெரியும் காதலித்தவர்கும்,
காதலிக்காதவர்கும்.
"காதல்"
இந்த ஒன்றை கொண்டே
100000 ஹய்கூ பிறக்கலாம்
10000 கவிதைகள் எழுதலாம்,
1000 சிறுகதைகள் உருபெறலாம்
100 நாவல்களுக்கான கரு உண்டு
குறும்படங்கள், திரைப்படங்கள் இன்னும் பல நூற்றாண்டு இதை தவிர்த்து சொல்ல இயலாத காரியம்.
அந்த காதல் என்னை மட்டும் விடுமா என்ன?
"நாங்கள்" மற்றவரை போல அல்ல, என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன்.
காதலெனும் வரம் பெற்ற அத்தனை பேரை போல தான் நாங்களும்.
"பேறு" பெற்றவர்கள்.
இருவரும் அவரவர் கொள்கைகளை ஏற்க நிர்பந்தித்திருக்கிறோம்.ஆனால் பெரும்பாலான சமயங்களில் அவரவர் கொள்கைகளிலேயே பிடிவாதமாய் நின்றிருக்கிறோம். கோபம் வருவதுண்டு அவ்வபோது, ஆனால் மறுகணமே
எங்களின் காதல் அது அத்தனையும் புறந்தள்ளி எம் நெருக்கத்தின்
அடர்த்தியை கூட்டிவிடும்.
இனி அவனிடம் கொஞ்சம்!
ஆனால் நீ யார் என்பது தெரியும் முன்பே நீ என்னில் ஒரு புள்ளியாய் நின்ற தருணம் இது.
வருங்காலம் என்னை உன்னுடன் எந்த உறவாய் இணைக்க போகிறது என்ற புதிர் தெரியாமலே காரணங்கள் அற்று ஒரே ஒரு நொடி உன் பார்வைகளால் என்னை நிறைத்து போனாய் .
பெண்ணியம் பேசி வாதிடும் பொளுதுகளிளெல்லாம் புன்னகையால் கடந்து 'ஆணவம் ஆணவம்" என்பாய். அது ஆணவம் இல்லை அடிப்படை உரிமை
என்பேன்.
விவாதங்கள் அத்தனைக்கும் காதலாய் முடிவுரை சொல்வாய்.
என்னை "திமிர்" சொன்னாலும் கூட அந்த திமிர் தான் உனக்கு
பிடித்திருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறேன் இதுவரை.
அது ஒன்றே என் "திமிர்" கூட காரணம்.
ஒட்டி செல்லும் நொடிகள் யாவும் குறை கூறி வெருப்பேற்றுகிறாய்,
உச்சாணி கொம்பில் அமர்ந்து உன்னை ஏளனம் தருணங்களில் ரசிக்கிறாயே!
அதன் மர்மம் கொஞ்சம் சொல்ல கூடாதா?
முரண் எப்போதும் மோதலில் முடியும்,
நம்மில் மட்டும் காதலாய் முடியும்!
இவை அத்தனைக்குமே நம் அகராதியில் காதல் என்ற மறு பெயர் உண்டு.
காதலுக்கு மட்டும் பெருங்காதல் என்ற பெயர்.
வினோதம் இல்லையா ? எனக்கு மட்டுமல்ல காதலோடு நகரும்
வாழ்வை பெற்ற அனைவருக்கும் இதே போல் தான்.
ஏற்கனவே நான் உணர்ச்சி களஞ்சியம் எனவே அளவோடு காதல் செய் என்று எத்தனை முறை உன்னிடம் சொல்வது,
அதன் பலனே உலகம், அரசியல், பெண்ணியம், சாதியம் என முற்போக்காய் பேச நிறைய இருந்தும் உன்னை தாண்டி பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை.
பிறவிகள் ஏழென்ற கதை எனக்கும் தெரியும்,
அதை காரணம் சொல்லி காதல் செய்ய அவகாசம் கோராதே!
உலகில் அறியமுடியா புதிர் நாளை என்பதால் இயன்றவரை இப்போதே காதல் செய் !
நானும் இருக்கும் வரை அதையே செய்வேன் உன்னை காட்டிலும் பல நூறு மடங்காய்!
காதலுடன் !
Comments
Post a Comment