Skip to main content

Posts

செய்முறை விளக்கங்கள் எத்தனை கேட்டாலும் , செய்யும் பொழுதுகளில் எல்லாம் கொஞ்சம் இடரத்தான் செய்கிறது!  
  அட்டு, மொக்கை என்று தமிழ் பேசி பழகிவிட்ட நமக்கு இல்லம், பகிர்வு, உறக்கம் என்று அழகுத்தமிழில் பேசினாலே கவிதை என்றாகி விட்டது!
  மை கொஞ்சமும் காதல் நிறையவும் கசியும் என் கண்களை பார்! அதை காட்டிலும் காதல் அட்டைகள் ஒன்றும் அதனை நுட்பமாய் என் காதல் சொல்லி விடபோவதில்லை ! காதலர் தின வாழ்த்துக்கள் !!!
  ஒற்றை எழுத்தால் குரலெடுத்து ஆ என்றாய் ஊ என்றாய், சுற்றம் இருப்பவரோ அதை, வெறும் சத்தம் என்றே எண்ணியிருக்க , எழுத்தொன்றும் சொல்லாகும் அற்புதம் அது உன் மழலை மொழி என்றறிவேன் நான் மட்டும் ! " யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்றான் பாரதி . மகளே உன் மொழி அறியாமல் போனதனால் !
  #பிரசவம் #Delivery வலி கண்டதாய் சொல்லி பிரசவச அறையில் கிடத்துகிறார்கள். எப்படி வலி என்ற இரெண்டெழுத்து மட்டும் இதற்கு பொருந்தும் என்று தெரிய வில்லை, நடு எலும்பிற்கு கீழே நடக்கும் மாற்றங்கள் அத்தனை தாங்க தக்கவையாக இராது, முனகலும் கதறலும் செவிலிகள் காதுகளுக்கு கேட்காது,. இதோ இன்னும் பத்து நிமிடம் என்று ஒவ்வொரு 10 நிமிடதிற்கும் பொய் வாக்குறுதிகள் கொடுப்பார்கள் ஆயாக்கள், உள்ளங்கைகளை பிரியமானவர்கள் பற்றி கொண்டால் நல்லது என்றிருக்கும், இதன் நடுவே பனிக்குட நீரும் குருதியுமான ஈர பிசுபிசுப்பில் வேறு படுக்கவேண்டியதாகி போகும், தலை தெரிவதாய் மருத்துவர் முக்க சொல்கிறார் அய்யோ !முனங்கவும் ! வலுவற்ற நிலையில் , அம்மா !என்று அலறி இறந்து போனேனா என எண்ண துவங்கும் வேளையில், பிறந்திருக்கும் என் மகவு அழ திராணிற்று இருக்கும் எனக்கு பதிலாய் அழுது கொண்டே !
பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!! முழுவதுமாய் உலராமல் ஈரம் படிந்த கூந்தலுடன் பணிக்கு ஆயத்தமாவாள், அமர்ந்திருக்கும் அழகு பெண்ணின் முடி உலர்த்த, அது முடிந்து புருவம் திருத்துகிறாள் மாறி மாறி ,ஆடி கொடுத்து ஒப்புதல் பெற சரியென்பவர் எவருமிருப்பதில்லை, திருத்தம் சொல்ல மீண்டும் திருத்துவாள், அதன் பிறகு அறையடி கூந்தலை காலும் அறையுமாக்குவாள் கூந்தலை முடியா சபதமேற்ற பெண்களுக்கு, இடை இடையே அவள் நிறுவன தயாரிப்புகளுக்கு இவளே விளம்பர நிர்வாகியாகி விற்பனைக்கு மெனக்கெடுவாள் ப்ளீச் என்போரிடம் கூடவே பேசியலுக்கும், வேக்ஸ்ங் செய்வோரிடம் பெடி-க்யூர்-க்கும் சிபாரிசு செய்து வந்திருக்கும் பெண்ணின் அழகுக்கும், அவள் முதலாளியின் லாப கணக்கிற்கும் பாடுபடுவாள், இரவின் முகப்பில் இறுக்கி பிடித்த ஜீன்ஸ் பேண்ட களைந்து சுடிதார் துப்பட்டாவிற்கு மாறி இப்போது காய்ந்திருக்கும் தலையை பின்னி முடித்து அலங்காரம் கலைத்து வீடு திரும்புவாள் அழகு நிலைய பணி பெண் ஒருத்தி !!!!!!!!!!!!!!!!!!  
  ஆண்களாய் இருப்பது ................... அடக்கவேண்டிய அவசியமேதும் இருப்பதில்லை , தோன்றும் கணத்தில் கழிக்கலாம் தெரு ஓரங்களில் கூட, கூட்ட நெரிசலில் வேர்த்து போனால் கவலை இல்லை சட்டபொத்தான்களை கழற்றினால் போதும் காற்று வாங்க , அடை மழையில் நனைய நேரிட்டால், ஒதுங்கும் கடைகளில் குளிருக்கு இதமாய் தேநீர் பருகலாம், ஒப்புதல் எதுவும் தேவையில்லை நண்பனின் அறைக்கு நடுநிசியில் போக, தலைவலியோடு வீடு திரும்புகையில் சூடான காபி கிடைக்கும் வலியின் வீரியம் குறைக்க , அவசரங்களில் அடுக்கிய சட்டைகளை கலைத்தால் பரவாயில்லை திரும்ப அடுக்க அவசியமேதுமில்லை மேல்சட்டை அணியாமல் இருந்தால் போதும் முற்றும் துறந்தவனென தெரிவிக்க, வாந்தி, மயக்கம், வலிகள் எதுமின்றி பிள்ளைகள் பெயரின் முதல் எழுதாகலாம் ஆமாம்! ஆண்களை இருப்பது தான் எத்தனை சௌகர்யம் ! 23 Sankar Narayanan and 22 others 7 Comments 11 Shares Like Comment 7